சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாட செல்லவுள்ள இலங்கை அதிகாரிகள்!

Mayoorikka
2 years ago
சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாட செல்லவுள்ள இலங்கை அதிகாரிகள்!

சர்வதேச நாணய நிதியத்துடன் (ஐ.எம்.எஃப்) இடம்பெறவுள்ள கலந்துரையாடலுக்காக நிதி அமைச்சர் அலி சப்ரி தலைமையில், மத்தியவங்கி ஆளுநர், நிதியமைச்சின் செயலாளர் உள்ளடங்கிய குழுவினர் வொஷிங்டனுக்கு செல்வுள்ளனர்.

எதிர்வரும் 18ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள கலந்துரையாடல் 5 நாட்களுக்கு இடம்பெறவுள்ளது.

அரசாங்கத்தின் சர்வதேச கடனை மறுசீரமைக்க உதவும் நிதி மற்றும் சட்ட ஆலோசகர்கள் 21 நாட்களுக்குள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றும் நிதியமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.