நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு

#SriLanka #Sri Lanka President #Minister
Prabha Praneetha
2 years ago
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு

நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்த நாடாளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார்.

அதன்படி, ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பதினொரு கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்ளுக்கும் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்று மாலை இந்த பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பிட்ட குழுவை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது குறித்த யோசனையை முன்வைத்திருந்தனர்.