மஹிந்தவின் பதவியை காப்பாற்றிய அரசியல்வாதிகள்

Nila
2 years ago
மஹிந்தவின் பதவியை காப்பாற்றிய அரசியல்வாதிகள்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்வதற்கு மேற்கொண்ட தீர்மானம் இரண்டு அமைச்சர்களின் தலையீட்டினால் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 
கடந்த 4ஆம் திகதி அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் இராஜினாமா செய்வதற்கு முன்னதாக பிரதமருடனான சந்திப்பின் போது பிரதமர் தனது முடிவை அறிவிக்கவிருந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
 
முன்னாள் அமைச்சரான பிரசன்ன ரணதுங்க மற்றும் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் பலரது வற்புறுத்தலின் பேரில் பிரதமர் இந்த முடிவை மாற்றியுள்ளார்.

 
பிரதமர் பதவி விலகினால் தானும் அரசியலில் இருந்து விலகுவேன் என பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளதாக தெரியவருகிறது.
 
பிரதமர் தனது இராஜினாமா கடிதத்தை ஏற்கனவே தயார் செய்து கொண்டிருந்த நிலையில், இந்த முடிவில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது..
 
எனினும் பிரதமர் மஹிந்த தொடர்ந்தும் பதவியில் நீடிக்க, ஏனைய அமைச்சரவை அமைச்சர்கள் அனைவரும் பதவியை ராஜினாமா செய்தனர்.
 
இந்நிலையில் ஜனாதிபதியின் முன்னிலையில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மீண்டும் அமைச்சராக பதவியேற்றமை குறிப்பிடத்தக்கது.