ஜனாதிபதிக்கெதிரான அமெரிக்க ஆர்ப்பாட்டத்தில் இலங்கையர்களால் விரட்டப்பட்ட பிரபல நடிகை சஞ்சீவனி

Prathees
2 years ago
ஜனாதிபதிக்கெதிரான அமெரிக்க ஆர்ப்பாட்டத்தில் இலங்கையர்களால் விரட்டப்பட்ட பிரபல நடிகை சஞ்சீவனி

அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் எதிராக அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இலங்கையர்கள் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்தில் இருந்து பிரபல நடிகை சஞ்சீவனி வீரசிங்க வெளியேறுமாறு கோரப்பட்டுள்ளார்.

அப்போது போராட்டக்காரர்கள் அவரை கூச்சல் போட்டு விரட்டியதாக கூறப்படுகிறது.

போராட்டத்தில் கலந்து கொள்ள வந்த நடிகையை பொதுமக்கள் அதிருப்திக்கு உள்ளாக்கியதால் அவர் அவ்விடத்திலிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்படுகிறது.

சஞ்சீவனி வீரசிங்க ஜனாதிபதித் தேர்தலின் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளித்ததாக ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர்.