எரிவாயு விநியோகஸ்தர்களுக்கான முக்கிய அறிவிப்பு

Prabha Praneetha
2 years ago
எரிவாயு விநியோகஸ்தர்களுக்கான முக்கிய  அறிவிப்பு

எரிவாயு சிலிண்டர்களை விற்பனை செய்யும் போது, ​​கடைகளில் உரிய விலைகளை காட்சிப்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

எரிவாயு சிலிண்டர்கள் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்கப்படுவதாக புகார்கள் வந்துள்ளதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அதன்படி, எரிவாயு விநியோகஸ்தர்கள் எரிவாயு விற்பனை விலையை நுகர்வோருக்கு தெரியும் வகையில் காட்சிப்படுத்துவது கட்டாயமாகும்.