இலங்கையை முடக்குவது தொடர்பில் அரச உயர்மட்டங்கள் அவசர ஆலோசனை!!

Nila
2 years ago
இலங்கையை  முடக்குவது தொடர்பில் அரச உயர்மட்டங்கள் அவசர ஆலோசனை!!

நாட்டில் தற்போது எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கு நெருக்கடி மற்றும் தேக்க நிலைமையடுத்து நாட்டை ஒருவார காலம் முடக்குவது தொடர்பில் அரசாங்கத்தின் உயர்மட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாட்டினை ஒரு வாரகாலம் நாட்டை முடக்கி அத்தியாவசிய சேவைகளைச் சீர் செய்வது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகின்றது.

இது தொடர்பாக இறுதித் தீர்மானம் எடுக்கப்பட்டால் இன்று மாலை அது தொடர்பான அறிவித்தல் வெளியாகலாம் என கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.