காலி முகத்திடலில் திடீரென அகற்றப்பட்ட சமிக்ஞை கோபுரம்

Prathees
2 years ago
காலி முகத்திடலில் திடீரென அகற்றப்பட்ட சமிக்ஞை கோபுரம்

 காலி முகத்திடலில் போராட்டக்காரர்களுக்கு இலவச 4பு மற்றும் 5பு வசதிகளை வழங்க டயலொக் நேற்று நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இன்று (16) பிற்பகல் குறித்த சிக்னல் கோபுரங்களை அகற்றுவதற்கு டயலொக் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், அவ்வாறான தொழிநுட்ப வசதிகளை வழங்குவதை திடீரென நிறுத்தியுள்ளது.

குறித்த இடத்தில் ஒலிபரப்பு கோபுரம் பொருத்தப்பட்டிருந்த போதிலும், எவ்வித இணைப்பும் வழங்கப்படவில்லை என அங்குள்ளவர்கள் குறிப்பிட்டனர்.

எனினும் இது போர்க்களத்துக்காகவே கட்டப்பட்டது என்று அங்கு வந்த டெக்னீஷியன்கள் தெரிவித்தனர்.