8 பில்லியன் டொலர் சம்பாதிக்க அரசாங்க சொத்துக்களை குத்தகைக்கு விட தீர்மானம்

Prathees
2 years ago
8 பில்லியன் டொலர் சம்பாதிக்க அரசாங்க சொத்துக்களை குத்தகைக்கு விட தீர்மானம்

பல பெறுமதிமிக்க அரச சொத்துக்களை குத்தகைக்கு வழங்குவதன் மூலம் 8 பில்லியன் டொலர்களை உடனடியாக திரட்ட அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குத்தகைக்கு முன்மொழியப்பட்ட சொத்துக்களில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம்இ மத்தள விமான நிலையம் மற்றும் இரத்மலானை விமான நிலையம் ஆகியவை அடங்கும். இவை நீண்ட கால குத்தகைக்கு விடப்படும். 

கட்டுநாயக்க விமான நிலையம் 2 பில்லியன் டொலர்களுக்கும், மத்தள விமான நிலையம் 300 மில்லியன் டொலர்களுக்கும், இரத்மலானை விமான நிலையம் 400 மில்லியன் டொலர்களுக்கும் குத்தகைக்கு வி உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும்இ கொழும்பு துறைமுகத்தின் தெற்கு பகுதி 600 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டு அடிப்படையில் வழங்கவும் கொழும்பு துறைமுக நகரத்தில் அரசாங்கத்திற்கு சொந்தமான பங்குகள் 4 பில்லியன் டொலர்களுக்கு குத்தகைக்கு விடப்படவுள்ளது.