நாட்டின் நெருக்கடி காரணமாக ஆடைத் துறை வீழ்ச்சியடையும் அபாயம்!

Mayoorikka
2 years ago
நாட்டின் நெருக்கடி காரணமாக  ஆடைத் துறை வீழ்ச்சியடையும் அபாயம்!

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக இலங்கையின் ஆடைத் தொழில்துறையும் பாரியளவில் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நாடு மீதான சர்வதேச அணுகுமுறையும் தங்கள் தொழிலில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று ஆடைத் துறை கூறுகிறது.

இலங்கையின் தற்போதைய பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு டொலர் நெருக்கடியே பிரதான காரணமாகும். ஆடைத் தொழில் நாட்டிற்கு டாலர்களை ஈட்டித் தரும் முக்கிய ஆதாரமாகும். எனவே, இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியால் ஆடைத் தொழில்துறையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஸ்டைலஸ் குழுமத்தின் உப தலைவர் கலாநிதி சமிந்த பி.கல்பகே கருத்துத் தெரிவித்தார்.

இந்நிலை தொடருமானால் இலங்கைக்கு கிடைக்கும் ஆடை ஆர்டர்கள் இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கு செல்லும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.