சீனி வரி மோசடி: மனித உரிமைகள் ஆணைக்குழு விடுத்துள்ள கோரிக்கை

Mayoorikka
2 years ago
சீனி வரி மோசடி: மனித உரிமைகள் ஆணைக்குழு விடுத்துள்ள கோரிக்கை

சீனிக்கான வரியை குறைத்தமையினூடாக அரசு இழந்த வருமானத்தை உரிய தரப்பினரிடமிருந்து மீள பெற்றுக்கொள்ள வேண்டும் என அரச கணக்காய்வாளர் நாயகத்தினால் வழங்கப்பட்டுள்ள பரிந்துரையை நடைமுறைப்படுத்த வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர், ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் ரோஹினி மாரசிங்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் அதிகாரத்தை முறையற்ற வகையில் பயன்படுத்தியமையால் இலங்கை பிரஜைகளின் பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகள் மீறப்படுவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதால் கணக்காய்வாளர் நாயகத்தினால் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.