2 மில்லியன் டொலர்களை வழங்கியே புதிய இராஜாங்க அமைச்சர்களை அரசாங்கம் நியமித்துள்ளது!

Mayoorikka
2 years ago
2 மில்லியன் டொலர்களை வழங்கியே புதிய இராஜாங்க அமைச்சர்களை அரசாங்கம் நியமித்துள்ளது!

2 மில்லியன் டொலர்களை வழங்கியே புதிய இராஜாங்க அமைச்சர்களை அரசாங்கம் நியமித்துள்ளது என எதிர்க்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

பாராளுமன்றில் இன்று கருத்து தெரிவிக்கும்போதே ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.
வீடுகளுக்கு சென்று பாராளுமன்ற உறுப்பினர்களை விலைபேசும் நடவடிக்கை இடம்பெற்று வருவதாக விமல் வீரவன்சவும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையிலேயே தமக்கு குறித்த தகவல் கிடைத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார சபையில் தெரிவித்தார்.