கடும் வாக்குவாதம்: பத்து நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட பாராளுமன்ற அமர்வு

Mayoorikka
2 years ago
கடும் வாக்குவாதம்: பத்து நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட பாராளுமன்ற அமர்வு

எதிர்க்கட்சியின் கூச்சல் குழப்பத்தை அடுத்து பாராளுமன்ற அமர்வை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பாதக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார பாராளுமன்றில் உரையாற்றியபோது எதிர்கட்சியுடன் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது.

பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்த சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த சாந்த பண்டார இராஜாங்க அமைச்சு பதவியை பெற்றிருந்தார்.