மற்றுமொரு பாராளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாக செயற்பட தீர்மானம்: பெரும்பான்மையை இழக்கும் அரசாங்கம்

Mayoorikka
2 years ago
மற்றுமொரு பாராளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாக செயற்பட தீர்மானம்: பெரும்பான்மையை இழக்கும் அரசாங்கம்

அரசாங்கத்தின் மற்றுமொரு பாராளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமது முன்மொழிவுகள் அடங்கிய கடிதம் ஒன்றை ஜனாதிபதிக்கு அனுப்ப அவர்கள் உத்தேசித்துள்ளனர்.

அமைச்சரவை அமைச்சுப் பதவிகளை இழந்த சிரேஷ்டர்கள் குழுவும் இந்தக் குழுவில் உள்ளதாகத் தெரியவருகிறது.

இந்நிலையில், 113 எளிய பெரும்பான்மை அரசாங்கத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.