ரம்புக்கனையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியமைக்கு இது தான் காரணம்: பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

Prathees
2 years ago
ரம்புக்கனையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியமைக்கு இது தான் காரணம்: பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

ரம்புக்கனையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியமை தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ கருத்து வெளியிட்டார்.

எதிர்ப்பாளர்கள் எரிபொருள் பவுசருக்கு தீ வைக்க முயற்சித்ததாகவும், அதனைத் தடுக்க பொலிஸார் பலத்தை பயன்படுத்தியதாகவும் அவர் கூறினார்.

கேகாலை வைத்தியசாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 12 பேர் காயமடைந்துள்ளனர்.

ரம்புக்கன பகுதிக்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.