ரம்புக்கனை சம்பவம் – மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை

Mayoorikka
2 years ago
ரம்புக்கனை சம்பவம் – மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை

ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ரம்புக்கனையில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க நால்வர் அடங்கிய விசேட குழுவொன்றை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு நியமித்துள்ளது.

விசாரணைகளின் போது கண்டறியப்பட்ட விடயங்களின் அடிப்படையில் பரிந்துரைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் ஆணைக்குழு கூறியுள்ளது.