ரம்புக்கனை துப்பாக்கிச் சூடு சம்பவம்: குற்றப் புலனாய்வுத் துறையினர் வசமாகும் விசாரணை
Mayoorikka
2 years ago
ரம்புக்கனை துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில், காவல்துறைமா அதிபரின் உத்தரவுக்கமைய குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் (சிஐடி) விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மூன்று நாட்களில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு பொறுப்பான பிரதி காவல்துறைமா அதிபருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேவேளை, ரம்புக்கனை துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த நபரின் இறுதிக் கிரியை நிறைவடையும் வரை முப்படையினர் ரம்புக்கனை பகுதியில் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.