மன்னியுங்கள் என கூறினால் மன்னிப்பு வழங்க தயார்: கர்தினால் மல்க்கம் ரஞ்சித் ஆண்டகை

Mayoorikka
2 years ago
மன்னியுங்கள் என கூறினால் மன்னிப்பு வழங்க தயார்: கர்தினால் மல்க்கம் ரஞ்சித் ஆண்டகை

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் மன்னியுங்கள் என கூறினால், அவர்களுக்கு மன்னிப்பு வழங்க நாங்கள் தயார் என கர்தினால் மல்க்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

 மன்னிப்பு வழங்குவது கிறிஸ்தவ மதத்தின் குணமாகும்.எனினும் உண்மையை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறினார்.

 இந்த நடவடிக்கையுடன் தொடர்புடையவர்கள், தாம் செய்த தவறுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இந்த செயற்பாடுகளின் பின்னால் இருந்துகொண்டு, அரசியல் ரீதியாக இலாபம் பெறுவதற்கு அந்த பயங்கரவாத குழுவை அனுப்பியவர்கள், அவர்களுடன் தொடர்புகளை பேணியவர்கள், இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட பின்னர் அதனை மூடி மறைப்பதற்கு முற்பட்டவர்கள், இவர்கள் அனைவரும் தாம் தவறு செய்துவிட்டோம். தமது கைகளால் தவறு ஏற்பட்டுவிட்டது என உளமரா ஏற்றுக்கொண்டால்,  அவர்களுக்கு மன்னிப்பு வழங்குவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம் என தெரிவித்தார்..

எனினும் தவறை ஏற்றுக்கொள்ளாமல், ஏனையவர்கள் மீது தவறை சுமத்திவிட்டு, தாம் தப்பிக்க முயற்சி செய்தால், செய்த தவறுக்கு மேலதிகமாக பொய்யான விடயங்களை செய்து, எதிர்காலத்தில் அது நீர்த்துப் போகும் என எண்ணினால், அது ஒரு ஏமாற்று நடவடிக்கை என கர்தினால் மல்க்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.