கடந்த 19ஆம் திகதி ரம்புக்கனையில் எரிபொருள் பவுசருக்கு தீ வைத்த நபர் கைது!
#SriLanka
#Fuel
#Arrest
Mugunthan Mugunthan
2 years ago
எரிபொருள் பவுசருக்கு தீ வைத்த சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
27 வயதான ஒருவரே நேற்று (22) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
எரிபொருளை கோரி கடந்த 19ஆம் திகதி ரம்புக்கனையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது ஒரு குழுவினர் எரிபொருள் பவுசரை நிறுத்தி தீவைக்க முயற்சித்துள்ளனர்.
இச்சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் நிலுவையில் உள்ளது.