அமைச்சர் வீட்டை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள்.. பலத்த பொலிஸ் பாதுகாப்பு

Mayoorikka
2 years ago
அமைச்சர் வீட்டை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள்.. பலத்த பொலிஸ்  பாதுகாப்பு

தோட்ட உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சராக அண்மையில் கடமைகளைப் பொறுப்பேற்ற பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.அரவிந்த குமாரின் வீட்டுக்கு முன்பாக இளைஞர்கள் குழுவொன்று கடந்த 23ஆம் திகதி தலவாக்கலை லிதுல மெரயா பிரதேசத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.

இராஜாங்க அமைச்சரை இராஜினாமா செய்யுமாறு கோரி தோட்டப்பகுதி இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாட்டில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, எரிபொருள் விலையேற்றம், எரிவாயு தட்டுப்பாடு, மின்வெட்டு போன்றவற்றால், அரசாங்கத்திற்கு ஆதரவாக தனது பதவியை மாத்திரம் ஏற்று, தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் இராஜாங்க அமைச்சராக எஸ்.அரவிந்த குமார் பொறுப்பேற்றுள்ளார். 

தோட்டத் துறைக்கு இதுவரை எதுவும் செய்யப்படவில்லை என போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் தெரிவித்தனர்.

இராஜாங்க அமைச்சர் எஸ்.அரவிந்த குமாரின் வீட்டிற்கு முன்பாக தோட்டப்பகுதி இளைஞர்கள் குழுவொன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து, அருகில் உள்ள பல பொலிஸ் நிலையங்களில் இருந்து பொலிஸ் அதிகாரிகள் லிதுலை பொலிஸ் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டு அமைச்சரின் வீட்டிற்கு அருகில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.