அடையாள வேலைநிறுத்தத்திற்கு தயாராகும் ரயில்வே தொழிற்சங்கங்கள்

#SriLanka #Railway #strike
அடையாள வேலைநிறுத்தத்திற்கு தயாராகும் ரயில்வே தொழிற்சங்கங்கள்

 நாட்டில் முன்னெடுத்துவரும் அரசுக்கு எதிராக மக்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்கும் வகையில் ரயில்வே தொழிற்சங்கங்கள் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, எதிர்வரும் 27ஆம் திகதி நள்ளிரவு தொடக்கம் 28ஆம் திகதி நள்ளிரவு வரையில் இவ்வாறு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளது

இந்த வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு பிரதான தொழிற்சங்கள் பலவும் தமது ஆதரவை வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.