அலரி மாளிகையை முற்றுகையிட்ட போராட்டக்காரர்களை வெளியேற்ற தடை உத்தரவு கோரிய பொலிஸார்: நீதிமன்றம் மறுப்பு

Prathees
2 years ago
அலரி மாளிகையை முற்றுகையிட்ட போராட்டக்காரர்களை வெளியேற்ற தடை உத்தரவு கோரிய பொலிஸார்: நீதிமன்றம் மறுப்பு

அலரிமாளிகைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து வெளியேற்றுமாறு பொலிஸாரின் கோரிக்கையை கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

குறிப்பிட்ட குழுவின் பெயரை குறிப்பிடாமல் விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு உத்தரவு பிறப்பிக்க முடியாது எனவும் நீதவான் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் செயற்பட்டால் பொலிஸாரின் அதிகாரத்தைப் பயன்படுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.