சோபித தேரருக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு

Prathees
2 years ago
சோபித தேரருக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு


வண.ஓமல்பே சோபித தேரருக்கு எதிராக குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அஸ்கிரிய மகாநாயக்க தேரரின் கையொப்பம் போலியானது என தேசப்பற்றுள்ள ஐக்கிய தேசியக் கட்சி இந்த முறைப்பாட்டை தாக்கல் செய்துள்ளது.

நாட்டின் தற்போதைய நிலைமைக்கு பல தீர்வுகளை முன்வைத்து கடந்த 20ஆம் திகதி ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் கட்சித் தலைவர்கள் இணைந்து மகாநாயக்கர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்தனர்.

இந்தக் கடிதத்தில் அஸ்கிரிய பீடாதிபதி அதி வணக்கம் வரகாகொட ஸ்ரீ ஞானரதன தேரர் கையொப்பமிடவில்லை எனவும், அவரது கையொப்பம் போலியானது எனவும் மனுதாரர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.