மருதானை புனித ஜோசப் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் தீ பரவியுள்ளதாக தகவல்

#SriLanka #School
மருதானை புனித ஜோசப் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் தீ பரவியுள்ளதாக தகவல்

மருதானை புனித ஜோசப் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் தீ பரவியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீயை கட்டுப்படுத்துவதற்காக 18 உத்தியோகத்தர்களுடன் 5 வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டதாக கொழும்பு தீயணைப்பு பிரிவினரிடம் நாம் வினவிய போது தெரிவித்தது.

தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், சேதம் எதுவும் இதுவரை மதிப்பிடப்படவில்லை எனவும் தீயணைப்பு படையினர் தெரிவித்தனர்.