இன்று கொழும்பு பங்குச் சந்தை நடவடிக்கையில் முன்னேற்றம்

#SriLanka #Stock #Colombo
இன்று கொழும்பு பங்குச் சந்தை நடவடிக்கையில் முன்னேற்றம்

கொழும்பு பங்குச் சந்தை (CSE) நடவடிக்கையில் இன்று (27) முன்னேற்றம் காணப்பட்டதனை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

அதற்கமைய, இன்றைய நாளின் முடிவில், அனைத்து பங்கு விலைச் சுட்டெண் (ASPI) 5.43% ஆக 375.15 புள்ளிகளால் அதிகரித்து 7,280.52 ஆக பதிவானது, S&P SL20 சுட்டெண் 10.85% இனால் 230.75 புள்ளிகளால் அதிகரித்து 2,356.71 ஆகவும் பதிவானது.

இன்றைய நாளில் பங்குப் பரிவர்த்தனைகள் இடம்பெற்றுள்ளதோடு, மொத்த புரள்வு ரூ. 2.18 பில்லியன் (2,184,684,009.45) ஆக பதிவாகியிருந்தது.

புது வருட விடுமுறைக்கு பின்னர் கடந்த இரு தினங்களாக S&P SL20 சுட்டெண்ணில் ஏற்பட்ட திடீர் தளர்வினால் பங்குச் சந்தை நடவடிக்கைகள் முற்றாக ஸ்தம்பிதமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.