ரம்புக்கனை விவகாரம்: கைது செய்த 4 பொலிஸ் தொடர்பாக நீதிமன்றில் இன்று சிஐடி அறிக்கை!

Mayoorikka
2 years ago
ரம்புக்கனை விவகாரம்: கைது செய்த 4 பொலிஸ் தொடர்பாக நீதிமன்றில் இன்று சிஐடி அறிக்கை!

ரம்புக்கனை துப்பாக்கிச் சூட்டை நடத்த உத்தரவிட்ட கேகாலை முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.பீ. கீர்த்திரத்ன மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் கைது செய்யப்பட்டமை தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் இன்று கேகாலை நீதவான் நீதிமன்றில் அறிக்கையிடவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனை தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற அறிக்கையிடலின் பின்னர், கிடைக்கப் பெறும் உத்தரவுக்கமைய, கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களை விளக்கமறியலில் வைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.