நீர்கொழும்பில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட 9 பேர் கைது

Prathees
2 years ago
நீர்கொழும்பில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட 9 பேர் கைது

நீர்கொழும்பு - ஏத்துகல பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட மூன்று பெண்கள் உட்பட 9 பேர் ஐஸ் மற்றும் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். 

நீர்கொழும்பு பிரதேச குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் இன்று (30) காலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 அவர்களிடம் இருந்து 1 கிராம் ஐஸ், 9 கிராம் ஹெரோயின், 350 மில்லிகிராம் கஞ்சா மற்றும் வெளிநாட்டு சிகரெட்டுக்கள் என்பன மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நீர்கொழும்பு பிரதேசத்தை சேர்ந்த 20 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.