நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் மின் உற்பத்தி செய்யும் இயந்திரம் செயலிழப்பு!

Mayoorikka
2 years ago
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் மின் உற்பத்தி செய்யும் இயந்திரம் செயலிழப்பு!

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் 270 மெகாவோட் மின் உற்பத்தி செய்யும் இயந்திரத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

ஜெனரேட்டரின் திருத்தப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு 5 நாட்கள் ஆகும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

அனல் மற்றும் நீர் மின் நிலையங்களுக்கு மின் விநியோகம் தாமதமின்றி நிர்வகிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.