தமிழகம் செல்ல முற்பட்ட வவுனியா வாசிகள் யாழ்.அல்லைப்பிட்டியில் கைது!

#SriLanka #Tamil Nadu #Arrest
தமிழகம் செல்ல முற்பட்ட வவுனியா வாசிகள் யாழ்.அல்லைப்பிட்டியில் கைது!

தமிழகம் செல்ல முற்பட்ட வவுனியா வாசிகள் யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

வவுனியாவில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் நேற்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணம் சென்று , அல்லைப்பிட்டி கடற்பகுதி ஊடாக இந்திய செல்ல முற்பட்ட வேளை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்ட நால்வரையும் சட்ட நடவடிக்கைக்காக ஊர்காவற்துறை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 

இவர்களை இந்தியாவிற்கு அனுப்பவதற்கான ஒழுங்குகளை மேற்கொண்ட நபர்கள் தொடர்பிலான விசாரணைகளையும் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.