குறைந்த விலையில் எரிபொருள் வழங்குமாறு கோரி கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்.

#SriLanka #Fuel #strike
குறைந்த விலையில் எரிபொருள் வழங்குமாறு கோரி கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்.

கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகத்திற்கு முன்பாக மௌன போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை தீர்க்க ரஷ்யா தலையிட வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தியாவைப் போன்று இலங்கைக்கும் குறைந்த விலையில் எரிபொருளை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுக் கடமை மையம் உள்ளிட்ட பிக்குகள் குழுவினால் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றையும் தூதரகத்திடம் கையளித்தனர்.