இந்தியாவில் இருந்து இன்று இலங்கைக்கு வந்த 40,000 மெட்ரிக் டொன் பெற்றோல்!

Mayoorikka
2 years ago
இந்தியாவில் இருந்து இன்று இலங்கைக்கு வந்த 40,000 மெட்ரிக் டொன் பெற்றோல்!

இந்தியாவில் இருந்து இன்று 40,000 மெட்ரிக் டொன் பெற்றோல் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக இந்தியா உயர்ஸ்தானிகரகம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

இலங்கை மக்களுக்கான இந்தியாவின் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கும் வகையில் இதுவரை 440,000 மெட்ரிக் டொன் எவ்வேறு வகையிலான எரிபொருட்களை இந்தியா வழங்கியுள்ளதாக குறித்த ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மேலும், எதிர்காலத்தில் அதிக எரிபொருட்கள் வழங்கப்படும் என்றும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.