பாராளுமன்றம் முற்றுகையிடப்படலாம் என்ற அச்சத்தில் பல வீதிகளுக்கு பூட்டு.

#SriLanka #Parliament #Lanka4
Shana
2 years ago
பாராளுமன்றம் முற்றுகையிடப்படலாம் என்ற அச்சத்தில் பல வீதிகளுக்கு பூட்டு.

பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பணியாட் தொகுதியினர் எவ்விதமான இடையூறுகளும் இன்றி, பாராளுமன்றத்துக்குச் செல்லும் வகையில், பாராளுமன்றத்துக்கு செல்லும் சகல வழிகளிலும் மூடப்படும் என்று பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.

இன்றும் நாளையும் (06) பொதுமக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட விருப்பதாக கிடைத்த தகவல்களுக்கு அமையவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என பொலிஸ் திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.