இலங்கை அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் வெளியான ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிக்கை!
Nila
2 years ago
ஜனாதிபதி ஊடகப்பிரிவின் கடிதத் தலைப்பை பயன்படுத்தி சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ள தகவல் உண்மைக்கு புறம்பானது என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.
ஹர்த்தால் நடவடிக்கையில் ஈடுபடும் அரச ஊழியர்களின் மே மாத சம்பளம் குறைக்கப்படும் என சமூகவலைத்தளங்களில் செய்திகள் பகிரப்படுகின்றது.
அது முற்றிலும் பொய்யானது என ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.