ஹர்த்தால் இயக்கம் குறித்து போலீசார் எச்சரிக்கை!!

Prabha Praneetha
2 years ago
ஹர்த்தால் இயக்கம் குறித்து போலீசார் எச்சரிக்கை!!

ஹர்த்தாலில் கலந்து கொள்ள விரும்பாதவர்களை சில குழுக்கள் அச்சுறுத்தி, வியாபார நிலையங்களை திறக்க வேண்டாம் என்று வற்புறுத்தியுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் எச்சரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறான நாச வேலைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான சட்டம் அமுல்படுத்தப்படும் என சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அமைதியான முறையில் போராட்டங்கள் மற்றும் ஹர்த்தாலில் ஈடுபடுவதற்கு அரசியல் சாசனத்தின் மூலம் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளை காவல்துறை மதிக்கிறது என்றார்.

தொழிற்சங்கங்கள், மாணவர் இயக்கக் குழுக்கள் மற்றும் பிற அமைப்புகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு மற்றவர்களுக்கு இடையூறு விளைவிக்காமல், நாட்டின் சட்டத்தை கடைபிடிக்குமாறு காவல்துறை வலியுறுத்தியுள்ளது.