ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற விசேட அமைச்சரவை கூட்டம்!

#SriLanka #Sri Lanka President #Prime Minister
Reha
2 years ago
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற விசேட அமைச்சரவை கூட்டம்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் நேற்று மாலை விசேட அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்றது.

இதில், பிரதமர் உள்ளிட்ட அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் பங்கேற்றுள்ளனர்.

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி, பொது நிர்வாக முடக்கல் போராட்டம் உட்பட நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் குறித்து, அமைச்சர்கள் இதன்போது கருத்துக்களை முன்வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்ற பெரும்பான்மை பலம் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

நாடாளுமன்றில் 113 என்ற பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கும் நபருக்கு பிரதமர் பதவியை வழங்க வேண்டி ஏற்படும் என ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை, தமது பதவியிலிருந்து விலகுமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதியின் இந்தத் தீர்மானத்திற்கு அமைச்சர்கள் சிலரும் ஆதரவளித்துள்ளதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.