மீண்டும் வழமைக்கு திரும்பிய போக்குவரத்து சேவைகள்! சில சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

Mayoorikka
2 years ago
மீண்டும் வழமைக்கு திரும்பிய போக்குவரத்து சேவைகள்! சில சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

நாடளாவிய ரீதியில் ஹர்த்தால் காரணமாக தடைப்பட்டிருந்த புகையிரத சேவைகள் இன்று (07) மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே தொழிற்சங்க கூட்டணியின் இணை அழைப்பாளர் எஸ்.பி. விதானகே குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், தனியார் பேருந்துகள் இன்று மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டாலும், மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே சேவைகள் முன்னெடுக்கப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பேருந்துகளுக்கு போதிய எரிபொருள் இல்லாத காரணத்தினால் இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.