இலங்கையில் முகநூல் காதலின் விபரீதம் - சிறுமிகளுக்கு நேர்ந்த கதி

Nila
2 years ago
இலங்கையில் முகநூல் காதலின் விபரீதம் - சிறுமிகளுக்கு நேர்ந்த கதி

முகநூலில்  அறிமுகமான காதலனைத் தேடி பெற்றோருக்குத் தெரியாமல் ரக்வான பிரதேசத்திலிருந்து, மீகஹதென்ன வந்த சிறுமிகள் இருவரை கடந்த 5ஆம் திகதி இரவு தமது பொறுப்பில் எடுத்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

 
இவ்வாறு பொலிஸார்  பொறுப்பேற்றுக்கொண்ட சிறுமிகள் ரக்வான பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயது மற்றும் 15 வயதான  பாடசாலை மாணவிகளாவர். 
 
பொல்கம்பளை, குருபிட்ட பிரதேசத்திலுள்ள வீடொன்றில் இருக்கும்போது 119 அவசர பொலிஸ் அழைப்புக்கு கிடைத்த தகவலை அடுத்து இரவு 11.30 மணி அளவில் பொலிஸாரால்,  பொறுப்பேற்கப்பட்ட இந்த சிறுமிகள் இருவரும் விசாரணைக்குப் பின்னர் காதலன் என தெரிவிக்கப்படும் இளைஞனையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
 
கைது செய்யப்பட்ட காதலன் எனக் கூறப்படும் இளைஞன் 17 வயதானவர் என்றும் இவர் வலல்லாவிட்ட பிரதேசத்திலுள்ள தமது பாட்டியுடன் வசித்து வந்துள்ளார்.
 
பாட்டி சுகவீனமுற்று அடுத்து உறவினர் ஒருவர் வீட்டில் வசித்து வருகின்றார். சிறுமிகள்  இருவரிடமும் பொலிசார் விசாரணை மேற்கொண்டபோது 17 வயதான சிறுமியின் தந்தை , தாயை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டதாகவும் அதன் பின்னர் தாயின் இரண்டாவது கணவர் நம்மைத் தொந்தரவு செய்வதாகவும் பொலிஸாரிடம்  தெரிவித்துள்ளார்.
 
இரு சிறுமிகளும் அவர்களின் பெற்றோரிடம், பொலிஸாரால் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.