கடனை திருப்பிச் செலுத்த இலங்கைக்கு மேலும் ஒரு வருட கால அவகாசம் வழங்கிய நாடு!
Mayoorikka
2 years ago
SWAP வசதியின் கீழ், பங்களாதேஷிடம் இருந்து கடனாகப் பெற்ற 200 மில்லியன் டொலர்களை திருப்பிச் செலுத்த இலங்கைக்கு மேலும் ஒரு வருட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
வங்கியின் பணிப்பாளர்களுடன் நேற்று (08) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் கடன் விதிமுறைகளை மாற்றாமல் கால அவகாசம் வழங்க தீர்மானித்துள்ளதாக பங்களாதேஷ் மத்திய வங்கியின் பேச்சாளர் செரஜுல் இஸ்லாம் தெரிவித்தார்.
இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடி காரணமாக பணம் செலுத்தும் காலத்தை நீடிக்க பங்களாதேஷ் நடவடிக்கை எடுத்துள்ளது.