தீப்பற்றி எரிந்துகொண்டிருக்கும் தென்னிலங்கை - அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கை

Nila
2 years ago
தீப்பற்றி எரிந்துகொண்டிருக்கும் தென்னிலங்கை - அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கை

இலங்கையின் நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு அந்த திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இலங்கையின் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், அமைதியான போராட்டக்காரர்கள் மற்றும் அப்பாவி மக்கள் மீதான வன்முறைளுக்கு எதிராக ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பொருளாதார மற்றும் அரசியல் சவால்களுக்கு நீண்டகால தீர்வுகளைக் கண்டறிவதிலும் செயல்படுத்துவதிலும் கவனம் செலுத்துமாறு அனைத்து இலங்கையர்களையும் கேட்டுக்கொள்கிறோம்” என்று அமெரிக்க அரச திணைக்களம் தெரிவித்துள்ளது.