வன்முறை சம்பவங்கள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள செய்தி.

#SriLanka #Kamal Gunaratna #Lanka4
Shana
2 years ago
வன்முறை சம்பவங்கள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள செய்தி.

நேற்றைய தினம் இடம்பெற்ற வன்முறை  தொடர்பில் அரசாங்கம் பக்கச்சார்பற்ற விசாரணைகளை மேற்கொள்ளுமென பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரட்ன தெரிவித்துள்ளார்.

அத்துடன், தனியார் மற்றும் பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பதனை தவிர்க்குமாறும் அவர் நாட்டு மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

காலிமுகத்திடலில் நேற்றயை தினம் ஆரம்பமான மோதல்கள் சம்பவங்கள் நள்ளிரவு தாண்டியும் பல இடங்களில் இடம்பெற்றுள்ளது. 

இதன்போது சுமார் 25 இற்கும் மேற்பட்ட மகிந்த ஆதரவு அரசியல்வாதிகளின் வீடுகள் தீக்கிரையாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.