அனைத்து தொழிற்சங்கங்களும் தொடர்ச்சியான பொது வேலைநிறுத்தத்தை தொடங்குகின்றன.
#SriLanka
#union
#strike
Mugunthan Mugunthan
2 years ago
பல தொழிற்சங்கங்கள் இன்று முதல் மறு அறிவித்தல் வரை அனைத்து கடமைகளிலிருந்தும் இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளன.
இலங்கை நிர்வாக சேவைகள் சங்கத்தின் முழு உறுப்பினர்களும் இந்த தீர்மானத்திற்கு வந்துள்ளனர்.
வன்முறைகளுக்கு அரசாங்கம் ஆதரவு வழங்குவது தொடர்பில் தமது அதிருப்தியை வெளிப்படுத்த தொழிற்சங்கங்கள் நடவடிக்கை எடுத்து வருவதாக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
இந்நிகழ்வில் இலங்கை நிர்வாக சேவைகள் சங்கம், நிலைய அதிபர்கள் சங்கம், தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையம், சுகாதார சேவை தொழிற்சங்கங்கள், மின்சார தொழிற்சங்கங்கள், ஆசிரியர் 'அதிபர்கள்' தொழிற்சங்கங்கள் என்பன பங்குபற்றியுள்ளன.