நாட்டில் வன்முறைகள் நீடித்தால்..!! இலங்கையில் ஏற்படப் போகும் அபாயம்

#SriLanka #doctor #people
நாட்டில் வன்முறைகள் நீடித்தால்..!! இலங்கையில் ஏற்படப் போகும் அபாயம்

நாட்டில் வன்முறைகள் நீடித்தால் அதிகளவான நோயாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும்  அபாயம் உள்ளதாக இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.  

வன்முறை நீடித்தால் மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சைப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் எனவும், அதனால் அதிகளவான நோயாளர்கள் மருத்துவமனையில்  அனுமதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 

இதன் காரணமாக அமைதியான முறையில் போராட்டங்களை நடத்துமாறு மக்களை வலியுறுத்தி தொழிற்சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.