நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்துள்ள அவசர வேண்டுகோள்

Nila
2 years ago
நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்துள்ள அவசர வேண்டுகோள்

அரசியல் சார்புகளைப் பொருட்படுத்தாமல், குடிமக்களுக்கு எதிரான வன்முறை மற்றும் பழிவாங்கும் செயல்களை நிறுத்தவும், அமைதியாக இருக்கவும் மக்களை நான் கேட்டுக்கொள்கிறேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கேட்டுக்கொண்டுள்ளார்.

தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ள அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசியல் ஸ்திரத்தன்மையை ஒருமித்த கருத்து மூலம், அரசியலமைப்பு ஆணைக்குள் மற்றும் பொருளாதார நெருக்கடியை தீர்க்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.