வன்முறை இராணுவத் தலையீட்டிற்கு இடமளிக்கும்: ஜே.வி.பி எச்சரிக்கை

Prathees
2 years ago
வன்முறை இராணுவத் தலையீட்டிற்கு இடமளிக்கும்: ஜே.வி.பி எச்சரிக்கை

மக்கள் தொடர்ந்தும் வன்முறையில் ஈடுபட்டால் இராணுவ ரீதியில் தலையிட ராஜபக்சக்கள் தயாராக இருப்பதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கட்சியின் பொதுச் செயலாளர் டில்வின் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி பதவி விலகும் வரை அமைதியான முறையில் மக்கள் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் எனவும் ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.