அரசியல் செயற்பாடுகளுக்காக பயன்படுத்த அனுமதிப்பதில்லை! தனியார் பஸ் சங்கங்களின் சம்மேளனம் தீர்மானம்

Mayoorikka
2 years ago
 அரசியல் செயற்பாடுகளுக்காக பயன்படுத்த அனுமதிப்பதில்லை! தனியார் பஸ் சங்கங்களின் சம்மேளனம் தீர்மானம்

காலிமுகத்திடல் போராட்டத்தின் மீதான தாக்குதலைத் தொடர்ந்து ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக ஏறக்குறைய 40 பொது போக்குவரத்து பஸ்கள் தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளதாக பஸ் தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.

இவற்றில் கிட்டத்தட்ட 30 பேருந்துகள் தனியார் பேருந்துகள் என்று கூறப்படுகிறது.

தீயிட்டு கொளுத்தப்பட்ட பல பேருந்துகள் பழுது பார்க்க முடியாத அளவிற்கு நாசமாகி உள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எதிர்காலத்தில் எந்தவொரு தனியார் பஸ்களையும் அரசியல் செயற்பாடுகளுக்காக பயன்படுத்த அனுமதிப்பதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை தனியார் பஸ் சங்கங்களின் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் அஞ்சன இந்தன்ரஜித் தெரிவித்துள்ளார்.