கனடாவில் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட இலங்கை பெண்

Nila
2 years ago
கனடாவில் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட  இலங்கை பெண்

கனடாவுக்கு புலம்பெயர்ந்த இலங்கை பெண்ணொருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இலங்கையிலிருந்து கனடாவுக்கு புலம்பெயர தன் உறவினரான பெண் ஒருவருக்கு உதவிய மற்றுமொரு இலங்கையரால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. 

கம்லூப்ஸ் பகுதியில் வாழும் 71 வயதான நிஹால் மாலிகஸ்பே தன் உறவினரான தினுஷினி மாலிகஸ்பே  என்ற பெண்ணை இலங்கையிலிருந்து கனடாவுக்கு புலம்பெயர உதவியுள்ளார்.

நிஹால் குடும்பத்துடன் தங்கியிருந்து குடியுரிமை பெறுவதற்கான முயற்சியில் தினுஷினி  ஈடுபட்டிருக்கும் போது, பல முறை அவரிடம் நிஹால் அத்துமீறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.  

தற்போது 40 வயதாகும் தினுஷினி தான் நிஹால் குடும்பத்துடன் தங்கியிருக்கும்போது, பலமுறை பாலியல் ரீதியில் தாக்கியதாக குற்றம் சாட்டியுள்ளார். பின்னர் அவரது வீட்டிலிருந்து வெளியேறிய தினுஷினி கால்கரிக்குக் குடிபெயர்ந்துள்ளார்.

இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி, நீதிமன்றத்துக்கு வரும்போது தவிர்த்து மற்றபடி தினுஷினியை நெருங்கக்கூடாது என்று நிஹாலுக்கு எச்சரித்துள்ளார். அத்துடன் அவரின் கடவுச்சீட்டை ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டு, அவருக்கு பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், இனி தனது வீட்டில் வெளிநாட்டு மாணவர்கள் யாரையும் தங்க அனுமதிக்கக்கூடாது என்றும் நிஹாலுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் 16ஆம் திகதி மீண்டும் நிஹால் நீதிமன்றத்தில் ஆஜராகும் நிலையில், அன்று அவருக்கு தீர்ப்பு வழங்கப்படும் திகதி குறித்து அறிவிக்கப்பட உள்ளது.