போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்! சட்டத்தரணிகள் சங்கம்

Mayoorikka
2 years ago
போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்!  சட்டத்தரணிகள் சங்கம்

காலி முகத்திடலில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது, தாக்குதல் நடத்தியவர்கள் மாத்திரம் இதுவரை கைது செய்யப்படாமை கண்டனத்திற்குரிய விடயமாகும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன் நிறைவேற்று குழுவின் உறுப்பினர் சட்டத்தரணி நுவன் போபகே இதனைத் தெரிவித்துள்ளார்.
 
தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், காலி முகத்திடலில் அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் மீது, திட்டமிட்ட வகையில் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

வன்முறைகளில் ஈடுபட்டிருந்தவர்கள், முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஸவின் அழைப்பின் பேரில் அலரிமாளிகைக்கு வந்திருந்தனர்.

இதில் சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தொடர்புள்ளது. எனவே, காலி முகத்திடல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் நிறைவேற்று குழுவின் உறுப்பினர் சட்டத்தரணி நுவன் போபகே குறிப்பிட்டுள்ளார்.