தங்களுக்கு துப்பாக்கி வழங்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை...

#SriLanka #Parliament #Lanka4
Shana
2 years ago
தங்களுக்கு துப்பாக்கி வழங்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை...

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உரிய பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படாவிட்டால் தங்கள் பாவனைக்காக துப்பாக்கிகளை வழங்குமாறு ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். 

அண்மையில் நடைபெற்ற ஆளும் கட்சிக் கூட்டத்தில் இவர்கள் துப்பாக்கிக் கோரியதாகவும், தமது வீடுகள் மற்றும் உடமைகளைப் பாதுகாக்கத் தவறியதற்காக சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொலிஸ் மா அதிபரை தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.