நாடாளுமன்ற அமர்வை தவிர்த்த முன்னாள் பிரதமர் மஹிந்த - நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்!

Nila
2 years ago
நாடாளுமன்ற அமர்வை தவிர்த்த முன்னாள் பிரதமர்  மஹிந்த - நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்!

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் இன்று நாடாளுமன்றத்திற்கு சமூகமளிக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.

பிரதி சபாநாயகர்தெரிவிற்கான இரகசிய வாக்கெடுப்பு தற்போது இடம்பெற்றுவருகின்ற நிலையில் அவர்கள் சமூகமளிக்கவில்லை என அறிவிக்கப்பட்டது.

எனினும் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபகஷ் இன்று நாடாளுமன்றத்திற்கு வருகைத்தந்துள்ளார்.

தற்போது வாக்கெடுப்பு நடைபெற்று வாக்கு எண்ணும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மே – 09 சம்பவத்தின் பின்னர், 10 ஆம் திகதி அலரிமாளிகையில் இருந்து மஹிந்த ராஜபக்ச வெளியேறினார்.

அதன்பின்னர் திருமலை கடற்படை தளத்தில் தங்கவைக்கப்பட்டார்.

தற்போது, பாதுகாப்பு தரப்பினரின் உதவியுடன் திருகோணமலை கடற்படை முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த மகிந்த ராஜபக்ச அங்கிருந்து வெளியேறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், திருகோணமலை கடற்படை முகாமில் இருந்து வெளியேறியுள்ள முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச கொழும்புக்கு அருகில் மறைவிடம் ஒன்றுக்கு வந்துள்ளதாக தெரியவருகிறது.

இதன் காரணமாக, முன்னாள் பிரதமர் தங்கி இருக்கும் அந்த பகுதியின் பாதுகாப்பை பாதுகாப்பு தரப்பினர் பலப்படுத்தியுள்ளனர்.

இதேவேளை, மகிந்தவுக்கு மேலதிக பாதுகாப்பை வழங்கும் நோக்கிலேயே சிறப்பு பொலிஸ் அணியினர் கொழும்புக்கு அழைக்கப்பட்டதாகவும் பேசப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.