பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் விளக்கமறியலில்!

Mayoorikka
2 years ago
பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் விளக்கமறியலில்!

பாராளுமன்ற உறுப்பினர்களான சனத் நிஷாந்த மற்றும் மிலன் ஜயதிலக்க உள்ளிட்ட நான்கு சந்தேகநபர்களும் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

கடந்த 9 ஆம் திகதி ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் நேற்றைதினம் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

சந்தேகநபர்கள் இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.