மைத்திரிக்கு எதிரான மனுவில் பிரதிவாதியாக ரணில்

#SriLanka #Ranil wickremesinghe #Maithripala Sirisena #Lanka4
Shana
2 years ago
மைத்திரிக்கு எதிரான மனுவில் பிரதிவாதியாக ரணில்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கொழும்பு மஹாகமசேகர மாவத்தையில் வீடொன்றை வழங்குவதற்கான அமைச்சரவை தீர்மானத்தை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பிரதிவாதியாக குறிப்பிடுவதற்கு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

எல்.டி.பி. தெஹிதெனிய, யசந்த கோதாகொட மற்றும் ஷிரான் குணரத்ன ஆகிய நீதியரசர்கள் அடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதற்காக மனுதாரர்களுக்கு ஜூன் 29 வரை உயர் நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது.

மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து ஆகியோர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.